காசாவில் இருந்து வெளியேறும் பாலஸ்தீனவர்களுக்கு ஆஸ்திரேலியாவுக்குள் நுழைவதற்கு அனுமதி வழங்கக்கூடாது என்று எதிர்க்கட்சி தலைவர் பீட்டர் டட்டன் வலியுறுத்தியுள்ளார்.
தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலை மேற்கோள்காட்டியே அவர் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.
“போர் வலயத்திலிருந்து வெளியேறுபவர்கள் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புபடவில்லை என்பதை உறுதிப்படுத்துவதற்கு போதுமான ஏற்பாடுகள் இல்லை.” – எனவும் எதிர்க்கட்சி தலைவர் சுட்டிக்காட்டினார்.
போர் வலயத்திலிருந்து மக்கள் வெளியேறக்கூடாது என நான் கூறமுற்படவில்லை, ஆனால் எமது நாட்டுக்குள் அவர்கள் வருவது பாதுகாப்பு அச்சுறுத்தலாகும் எனவும் தமது கருத்தை பீட்டர் டட்டன் நியாயப்படுத்தியுள்ளார்.
ஒக்டோபர் 7 தாக்குதலின் பின்னர் பாலஸ்தீனர்களுக்கு 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன, அவற்றில் ஆயிரத்து 300 பேர்வரை ஆஸ்திரேலியா வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.