2023 கல்வி பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையில் 13 ஆயிரத்து 309 மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளனர் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 2.21 வீதமானோர் அனைத்து பாடங்களிலும் சித்தியடைய தவறியுள்ளனர்.
சாதாரண தரப்பரீட்சைக்கு இம்முறை 4 லட்சத்து 52 ஆயிரத்து 979 மாணவர்கள் தோற்றி இருந்தனர். 3 ஆயிரத்து 572 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடைபெற்றது.
சாதாரண தரப்பரீட்சைக்கு முதன்முறையாக தோற்றிய 3 லட்சத்து 22 ஆயிரத்து 573 மாணவர்களில் 2 லட்சத்து 44 ஆயிரத்து 288 பேர் உயர்தரம் கற்க தகுதிபெற்றுள்ளனர். (75.72 வீதம்)
சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் முதல் 10 இடங்களை பிடித்த மாணவர்களில் காலி சங்கமித்தா மகளிர் வித்தியாலய மாணவி முதலிடம் பிடித்துள்ளார்.
இரு மாணவர்கள் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.