ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் நடவடிக்கையை கண்டிக்கின்றோம் என்று ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மெல்பேர்ணில் நடைபெற்ற பாலஸ்தீன ஆதரவு பேரணியில் ஹிஸ்புல்லா அமைப்பின் கொடி அசைக்கப்பட்டு, அவ்வமைப்பின் தலைவரின் படங்கள் காட்சிப்படுத்தப்பட்ட நிலையிலேயே, வெளிவிவகார அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
இவ்வாறான நடவடிக்கைகள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவை என்பதுடன் சமூக ஒற்றுமைக்கும் தீங்கு விளைவிக்ககூடியவை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியல் தலைவர்கள் மற்றும் மக்கள் ஆகியோர் பயங்கரவாதத்தை நிராகரிக்க வேண்டும் எனவும் வெளிவிவகார அமைச்சர் அறைகூவல் விடுத்துள்ளார்.