பூர்வக்குடி மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் லேபர் அரசு அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருகின்றது என்று பிரதமர் Anthony Albanese தெரிவித்தார்.
பூர்வக்குடி மக்களுக்கான கட்டமைப்பை உருவாக்குவதற்காக லேபர் அரசால் முன்னெடுக்கப்பட்ட முயற்சி கடந்த வருடம் தோல்வியில் முடிந்தது. அதாவது குரல் வாக்கெடுப்பு தோல்வி கண்டது.
இந்நிலையில் Yolŋu Country பகுதியில் நடந்த Garma
விழாவில் பிரதமர் பங்கேற்றுள்ளார். புதிய பூர்வக்குடி அமைச்சராக பதவியேற்றுள்ள Malarndirri McCarthy பிரதமருடன் சென்றுள்ளார்.
சர்வஜன வாக்கெடுப்பு தோல்வியடைந்ததால் பூர்வக்குடி மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள வலி புரிகின்றது என பிரதமர் தெரிவித்துள்ளார்.
பூர்வக்குடி மக்களின் உரிமை சார்ந்த அறிக்கையில் உள்ள விடயங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.