லெபனானின் பாதுகாப்பு நிலைவரம் அச்சுறுத்தலாக மாறியுள்ள நிலையில், அங்குள்ள ஆஸ்திரேலியர்கள் நாடு திருப்புவதற்குரிய ஏற்பாடுகளை பெரடல் அரசு மேற்கொண்டுவருகின்றது.
இதன்படி லெபனானின் பெய்ரூட்டிலிருந்து நாளை மறுதினம் சனிக்கிழமை புறப்படவுள்ள வணிக விமானங்களில், ஆஸ்திரேலியர்களுக்காக 500 ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளதுடன், கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே லெபனானில் இருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
பெய்ரூட் விமான நிலையம் மூடப்பட்டால் வெளியேறுவதற்குரிய வாய்ப்பு குறைந்துவிடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
லெபனானில் 15 ஆயிரம் ஆஸ்திரேலியர்கள் வாழ்கின்றனர் என அரசு மதிப்பிட்டாலும் உண்மையான எண்ணக்கை 30 ஆயிரமாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. இவர்களில் ஆயிரத்து 700 பேரே வெளியேறுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.