யூத சமூகத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, ஆஸ்திரேலிய அரசின் அழைப்பின் பேரில் இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் இன்று சிட்னி வந்தடைந்தார்.
அவரின் வருகைக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சில அமைப்புகள் அவரை போர் குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு இந்த விஜயத்தை ‘முக்கிய நிகழ்வாக’ அறிவித்து, கூடுதல் காவல் அதிகாரங்களை பொலிஸாருக்கு வழங்கியுள்ளது.
இதனை எதிர்த்து, போராட்ட அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளன.
யூத சமூகத்தின் ஒரு பகுதி இந்த விஜயம் ஆறுதல் அளிப்பதாக கூறினாலும், மற்றொரு பகுதி கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிறது.
இஸ்ரேல் ஜனாதிபதிக்கு அரசமுறை மரியாதை அளிக்கப்படவுள்ளது. எனினும், அவர் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் உரையாற்றமாட்டார்.