இஸ்ரேல் ஜனாதிபதி Issac Herzog இன் வருகைக்கு எதிராக ஆஸ்திரேலியா முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன.
சிட்னி, மெல்பேர்ன், ஹோபார்ட் மற்றும் கன்பரா உள்ளிட்ட பல நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் போராட்டங்களில் பங்கேற்றனர்.
நான்கு நாள் பயணமாக இஸ்ரேல் ஜனாதிபதி இன்று ஆஸ்திரேலியாவை வந்தடைந்தார்.
யூத சமூகத்தை இலக்கு வைத்து சிட்னி, போண்டி கடற்கரையில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்ட மக்களுக்கு அவர் அஞ்சலி செலுத்தினார்.
யூத சமூகத்தினர் உட்பட முக்கிய சந்திப்புகளை இஸ்ரேல் ஜனாதிபதி நடத்தவுள்ளார். 12 ஆம் திகதிவரை அவர் ஆஸ்திரேலியாவில் தங்கி இருப்பார்.
சிட்னியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொலிஸார் களமிறக்கப்பட்டுள்ளனர்.
டவுன் ஹாலில் நடைபெற்ற பேரணியில், பாலஸ்தீனக் கொடிகளை ஏந்தி, ஹெர்சாக் வருகைக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
பலர் கடுமையான பொலிஸ் பாதுகாப்பு சூழல் குறித்து அச்சம் தெரிவித்தனர்.
மறுபுறத்தில் இஸ்ரேல் ஜனாதிபதியின் வருகைக்கு யூத சமூகம் ஆதரவு தெரிவித்துள்ளது.