மெல்போர்னின் குற்ற உலகில் ‘புகையிலை மன்னன்’ tobacco kingpin எனக் கூறப்படும் காசெம் ஹமத் Kazem Hamad ஈராகில் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் தொடர்பான படங்களை ஆஸ்திரேலிய பெடரல் பொலிஸார் AFP வெளியிட்டுள்ளனர்..
நகரின் புகையிலை போரைத் தொடங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஹமத், போதைப் பொருள் கடத்தல் தொடர்பான விசாரணையில் ஈராக் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட பின்னர், ரகசிய இடத்திற்கு மாற்றப்பட்டார்.
ஈராக் சட்ட அமுலாக்க அதிகாரிகள் வெளியிட்ட செய்திக்குறிப்பில், அவர் “உலகிலேயே மிகவும் ஆபத்தான தேடப்படும் குற்றவாளிகளில் ஒருவர்” என குறிப்பிடப்பட்டுள்ளார்.
அவர் மீது “துப்பாக்கிச் சூடு, கொலை, கடத்தல், வன்முறை தாக்குதல், வசூல் மற்றும் போதைப் பொருள் இறக்குமதி” உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
2023 ஆம் ஆண்டு மத்திய கிழக்கிற்கு நாடு கடத்தப்பட்டதிலிருந்து, ஆஸ்திரேலியாவின் சட்டவிரோத புகையிலை வர்த்தகத்தை 41 வயதான ஹமத் பின்னணியில் இருந்து இயக்கி வருவதாக AFP குற்றம் சாட்டுகிறது.
ஹமத் மற்றும் அவரது கும்பல் தொடர்பான AFP விசாரணை ‘ஆபரேஷன் கார்மன்’ என்ற பெயரில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஈராக் விசாரணைக்கு AFP ஆதரவளித்து வருவதாகவும், கடந்த வாரம் வரை மத்திய கிழக்கிற்கு அதிகாரிகளை அனுப்பி உதவி செய்ததாகவும் AFP தெரிவித்துள்ளது.
AFP ஆணையர் கிரிசி பாரெட் கூறுகையில், ஹமத்தின் கைது அவரது குற்றச் சங்கத்தை சீர்குலைத்துள்ளதாகவும், இது ஆஸ்திரேலிய குற்ற உலகத்திற்கு ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.