ஆஸ்திரேலிய லிபரல் கட்சிக்குள் தலைமைப்பதவி தொடர்பில் ஏற்பட்ட மோதல் உக்கிரமடைந்துள்ளது.
கட்சியின் தற்போதைய தலைவர் சூசன் லேவிற்கு எதிராக, நிழல் நிதியமைச்சர் ஆங்கஸ் டெய்லர் கடும் அழுத்தங்களைப் பிரயோகித்துவருகின்றார்.
தான் தலைமைப் பதவிக்கு போட்டியிடுவதற்கும் அவர் எதிர்பார்த்துள்ளார்.
லிபரல் கட்சியின் செல்வாக்கு மக்கள் மத்தியில் சரிந்து வருவதால் அதிருப்தியடைந்துள்ள உறுப்பினர்கள், ஆங்கஸ் டெய்லர் தலைமைப் பதவிக்கு வரவேண்டும் என கருதுகின்றனர்.
எனினும், தன் மீதான ஆதரவு உறுதியாக இருப்பதாகக் கூறும் சூசன் லே, கட்சிக்குள் நிலவும் இந்த நிலையின்மைக்கு முற்றுப்புள்ளி வைக்க போராடிவருகின்றார்.
இந்த அதிகாரப் போட்டியை வெளிப்படையான வாக்கெடுப்பு மூலம் விரைவாகத் தீர்க்க வேண்டும் என்று கட்சியின் மூத்த உறுப்பினர்கள் வலியுறுத்துகின்றனர்.
லிபரல் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள இந்த உள்ளகப்போர் ஆஸ்திரேலிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைமைப் பதவிக்குரிய கட்சி வாக்கெடுப்பு நாளை நடத்தப்படலாம் என தெரியவருகின்றது.