சிட்னிக்கு வருகை தந்த இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கை பின்தொடர்ந்து மிரட்டினார் எனக் கூறப்படும் 45 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த நபர் தனது வாகனத்தில் ஜனாதிபதியை பின்தொடர்ந்ததோடு, போண்டி சந்திப்பில் உள்ள ஒரு கல்வி நிலையத்தின் பாதுகாப்பு அதிகாரியை அவதூறாகப் பேசி காணொளி எடுத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
காவல்துறையினர் அந்த நபரை பெல்மோர் பகுதியில் மடக்கிப் பிடித்து, பொது இடத்தில் அநாகரீகமாக நடந்துகொண்டது உட்பட பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள அவர், அடுத்த மாதம் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேவேளை, இஸ்ரேல் ஜனாதிபதியின் ஆஸ்திரேலிய விஜயத்துக்கு பாலஸ்தீன ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு, போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.