குற்றப் பொறுப்பின் வயதெல்லையை 12 இல் இருந்து 10 ஆக குறைப்பதற்கான Northern Territory அரசின் திட்டத்துக்கு Northern Territory சிறார் ஆணையாளர் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
இந்த நகர்வு இளைஞர்கள் மத்தியில் குற்றச் செயல்களை அதிகரிப்பதற்கு வழி வகுக்கும் எனவும், இனரீதியிலான பாகுபாட்டையும் அதிகரிக்கும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Northern Territory தேர்தலில் வெற்றிபெற்று, Country Liberal கட்சி அரசமைத்துள்ளது. தனது அரசின் முதல் வேலைத்திட்டமாக சிறார் குற்றப் பின்னணி வயதெல்லையை 12 இல் இருந்து 10 ஆக குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.
Northern Territory நாடாளுமன்றம் இம்மாத இறுதியில் கூடவுள்ளது. இதன்போது மேற்படி சட்டதிருத்தம் முன்வைக்கப்படவுள்ளது.
இச்சட்டம் நிறைவேற்றப்பட்டால் 10 வயதிலுள்ள சிறார்கள் குற்றமிழைத்தால் அவர்களை கைது செய்து, விளக்கமறியலில் வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனினும், இந்த நடவடிக்கை ஏமாற்றம் அளிக்கின்றது எனவும், இது சர்வதேச மனித உரிமை தொடர்பான தரநிலைகளுக்கு புறம்பானது எனவும் சிறார்கள் தொடர்பான ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.