கணவனைக் கொலை செய்து, உடலத்தை மறைப்பதற்காக துண்டு துண்டாக வெட்டினார் எனக் கூறப்படும் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
சிட்னியைச் சேர்ந்த 53 வயதான குறித்த பெண்மீது கொலைக்குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது என்று நியூ சவூத் வேல்ஸ் பொலிஸார் இன்று தெரிவித்தனர்.
63 வயதான கணவர் 2023 மே மாதம் காணாமல்போனார் என பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இவர் காணாமல்போனமை சந்தேகத்துக்கிடமானது என்பதை ஆரம்பக்கட்ட விசாரணைகள்மூலம் பொலிஸார் கண்டறிந்தனர்.
இந்நிலையிலேயே குறித்த பெண் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார். தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.