ஈரான்மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் இணைந்து இன்று வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளன.
ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் பல்வேறு இடங்களில் சக்திவாய்ந்த வெடிச்சத்தங்கள் கேட்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
“The Shield of Judah” என்ற பெயரிலேயே தாக்குதல் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.
தெஹ்ரானில் உள்ள முக்கிய இராணுவ தளங்கள் மற்றும் அரசியல் மையங்கள் இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் ஜனாதிபதியின் வாசஸ்தலம், புலனாய்வுத்துறை அமைச்சகம், முக்கிய அரசியல் தலைவர்களின் இருப்பிடங்கள், உச்ச தலைவர் ஆயதுல்லா அலி கமேனி அலுவலகத்திற்கு அருகிலுள்ள பகுதிகளிலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
எனவே, ஈரானின் ஆன்மீகத் தலைவர் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளார் எனவும் கூறப்படுகின்றது.
தாக்குதலைத் தொடர்ந்து, இஸ்ரேலில் “உடனடி அவசர நிலை” பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இஸ்ரேல் வான்வெளி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
மக்களுக்கு எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கப்பட்டுள்ளன. ஈரான் மற்றும் அதன் அண்டை நாடுகளின் வான்வெளிகளில் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா தனது இராணுவப்படைகளை மத்திய கிழக்கில் குவித்து வந்த நிலையில், இந்த நேரடி தலையீடு முழு அளவிலான போருக்கான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.