நியூசிலாந்து மக்கள் சிறந்த வேலைவாய்ப்புகள் மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக அண்டை நாடான ஆஸ்திரேலியாவிற்கு பெருமளவில் இடம்பெயர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் நியூசிலாந்தின் முன்னாள் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் கூட தனது குடும்பத்துடன் சிட்னியில் குடியேறவுள்ளார் என தெரியவருகின்றது.
சிட்னியில் அவர் வீடு தேடி வருகின்றார் எனவும், விரைவில் குடியேறுவார் எனவும் கூறப்படுகின்றது.
நியூசிலாந்தில் நிலவும் மிக உயர்ந்த வாழ்க்கைச் செலவு, வீட்டுவசதி தட்டுப்பாடு மற்றும் குறைந்த ஊதியம் போன்ற காரணங்களே இளைஞர்களை வெளியேறத் தூண்டுகின்றன.
ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் அதிக வருமானம் மற்றும் சிறந்த வாழ்க்கைத் தரத்தை வழங்குவதால், நியூசிலாந்து தனது திறமையான மனிதவளத்தைத் தக்கவைக்க முடியாமல் போராடி வருகிறது.
இந்நிலையில் நியூசிலாந்தின் பிரதமர் பதவியை வகித்த ஒருவரே, புலம்பெயர்வது இளைஞர்கள் புலம்;பெயரும் விடயத்தல் அதிகரிப்பை ஏற்படுத்தும் என தெரியவருகின்றது.