பிரிஸ்பேனின் கிழக்கே உள்ள townhouse இல் ஏற்பட்ட தீ விபத்தில் எட்டு வயது சிறுமியொருவர் பலியாகியுள்ளார். மேலும் ஒரு பெண் காணாமல்போயுள்ளார்.
இன்று காலை 7 மணியளவிலேயே இத்தீ விபத்து இடம்பெற்றுள்ளது.
தீ விபத்தின்போது காணாமல்போன பெண் வீட்டுக்குள்ளேயே இருந்துள்ளார் எனவும், அவர் உயிர் தப்பித்திருக்க வாய்ப்பில்லை எனவும் தெரியவருகின்றது.
தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்கு கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டனர்.
தீ விபத்து தொடர்பில் குயின்ஸ்லாந்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.