இஸ்ரேல்மீது ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி நாளையுடன் (07) ஓராண்டு நிறைவுபெறும் நிலையில், ஆஸ்திரேலியாவிலுள்ள பாலஸ்தீன ஆதரவாளர்கள் மெல்பேர்ண் மற்றும் சிட்னியில் இன்று பேரணிகளை முன்னெடுத்துள்ளனர்.
அத்துடன், ஆஸ்திரேலியாவிலுள்ள ஏனைய சில நகரங்களிலும் பேரணிகள் நடத்தப்படுகின்றன.
இதன்போது ஹமாஸ், ஹிஸ்புல்லா உட்பட தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் கொடி மற்றும் சின்னங்களை காட்சிப்படுத்தக்கூடாது என பொலிஸாரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்படி பேரணிகளால் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.