மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழலால் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்க ஆஸ்திரேலிய அரசு தனது அவசர கால கையிருப்பிலிருந்து பெட்ரோல் மற்றும் டீசலை விடுவிக்க முடிவு செய்துள்ளது.
இந்தத் தற்காலிக மாற்றத்தின் மூலம் எரிபொருள் நிறுவனங்கள் விநியோகச் சங்கிலியை மிகவும் எளிதாகக் கையாள முடியும் என்று அமைச்சர் Chris Bowen தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே விலை உயர்வைக் கட்டுப்படுத்த எரிபொருள் தரக் கட்டுப்பாடுகளை தளர்த்திய நிலையில், தற்போதைய நடவடிக்கை எரிபொருள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் எரிபொருள் விநியோகம் சீராக உள்ள போதிலும், மத்திய கிழக்கு போர்ச்சூழலால் இந்த தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.