லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பை முடக்கும் நோக்கில் இஸ்ரேல் தனது இராணுவத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது.
அந்த நாட்டின் தலைநகரம் Beirut மற்றும் முக்கியப் பகுதிகளில் உள்ள ஆயுதக் கிடங்குகள் மற்றும் நிதி நிறுவனங்களைக் குறிவைத்து இஸ்ரேலியப் படைகள் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
இந்தப் போர் நடவடிக்கையால் லெபனானில் சுமார் எட்டு லட்சம் மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி பெரும் மனிதாபிமான நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனர்.
அதேவேளையில், ஹிஸ்புல்லா அமைப்பை நிராயுதபாணியாக்க இஸ்ரேல் துண்டுப் பிரசுரங்கள் மூலம் லெபனான் மக்களிடம் ஆதரவு கோருகிறது.
இந்தத் தீவிரமான மோதலால் லெபனான் சமூகத்தில் பிளவுகள் அதிகரித்துள்ளதோடு, மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
ஈரான் ஆதரவு பெற்ற அமைப்பாகவே ஹிஸ்புல்லா விளங்குகின்றது.
பாதுகாப்பு நிலைமை மோசமடைந்து வருவதால், லெபனானுக்கு நியமிக்கப்பட்டுள்ள அத்தியாவசியமற்ற ஆஸ்திரேலிய அதிகாரிகளை வெளியேறுமாறு வெளியுறவு மற்றும் வர்த்தகத் துறை அறிவுறுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியர்களுக்கு தூதரக ஆதரவை வழங்க குறைந்த எண்ணிக்கையிலான ஆஸ்திரேலிய அதிகாரிகள் அங்கு இருப்பார்கள் என தெரியவருகின்றது.