மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஆஸ்திரேலியாவில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் மற்றும் மக்கள் பதற்றத்தில் எரிபொருளை மொத்தமாக வாங்குவதால் பல நகரங்களில் எரிபொருள் நிலையங்கள் காலியாகியுள்ளன.
கிராமப்புற பகுதிகளில் விவசாயப் பணிகளும் போக்குவரத்துகளும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், அரசு தனது அவசரக்கால கையிருப்பைப் பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது.
நிலைமையைச் சமாளிக்க லேபர் அரசாங்கம் எரிபொருள் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதோடு, விவசாயத் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கவும் திட்டமிட்டுள்ளது.