ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் உரிமை இஸ்ரேலுக்கு உள்ளது என்று ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் ரிச்சட் மார்ள்ஸ் தெரிவித்தார்.
அத்துடன், காசா மற்றும் லெபனானில் பொதுமக்கள் கொல்லப்படுவது தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள அவர், போர் நிறுத்தத்துக்கு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.
ஈரானின் எண்ணெய் உற்பத்தி நிலையங்கள் மற்றும் அணு உலைகள்மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தக்கூடாது என அமெரிக்கா வலியுறுத்தியுள்ள நிலையில், அக்கூற்றை ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் வரவேற்றுள்ளார்.
அதேவேளை, இஸ்ரேல், பாலஸ்தீன பிரச்சினைக்கு இரு நாடுகள் தீர்வு முன்மொழிவு ஏற்கப்பட வேணடும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.