மிரட்டல்களுக்கு அடிபணியமாட்டோம் எனக் கூறி, அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்பால் விதிக்கப்பட்ட 48 மணிநேர காலக்கெடுவுக்கு பதிலடி கொடுத்துள்ளது ஈரான்.
ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கும், புதிய உடன்படிக்கையை எட்டுவதற்கும் 48 மணிநேரக் கெடுவை அமெரிக்க ஜனாதிபதி நேற்று விதித்திருந்தார்.
ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த 10 நாள் கெடு முடியும் நிலையிலேயே மேலும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த காலக்கெடுவிற்குள் இணங்காவிட்டால் ஈரானின் முக்கியக் கட்டமைப்புகளைத் தகர்த்து, கடுமையான ராணுவத் தாக்குதல் நடத்தப்படும் எனவும் ட்ரம்ப் எச்சரித்திருந்தார்.
இந்நிலையில் மேற்படி எச்சரிக்கையை ஈரான் திட்டவட்டமாக நிராகரித்ததோடு, டிரம்பின் கருத்தை அறிவற்ற செயல் என்றும் விமர்சித்துள்ளது.
அமெரிக்காவின் இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு அஞ்சப்போவதில்லை என்றும், இதற்குப் பதிலடியாக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் ஈரான் ராணுவம் பதிலடி கொடுத்துள்ளது.