பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களுக்கு தடைவிதிக்கப்பட வேண்டும் என்று நியூ சவூத் வேல்ஸ் மாநில பிரீமியர் வலியுறுத்தியுள்ளார்.
பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள் தொடர்பில் இவ்வருடம் 5 மில்லியன் டொலர்கள்வரை செலவாகியுள்ளது எனவும், பொது மக்களின் பணத்தை இவ்வாறு விரயமாக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்து வார இறுதியில் போராட்டங்கள், பேரணிகள் நடத்தப்பட்டுவருகின்றன. இதற்கு பொலிஸாரை பாதுகாப்பு பணிகளுக்கு பயன்படுத்த வேண்டியுள்ளது. எனவே, பொலிஸ் வளம் பற்றியும் மீள்பரிசீலனை செய்யவேண்டியேற்படும் எனவும் பிரீமியர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், போராட்டக்காரர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். மாநில பிரீமியர் மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.