இஸ்ரேல்மீது ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தி ஓராண்டு கடந்துள்ள நிலையில், இவ்விவகாரம் தொடர்பில் பிரதமரால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு ஆதரவளிக்க லிபரல் கட்சி மறுத்துவிட்டது.
தனிப்பட்ட அரசியல் இலாபத்துக்காக குறித்த பிரேரணையை பயன்படுத்துவதற்கு பிரதமர் முயற்சிக்கின்றார் என்று எதிர்க்கட்சி தலைவர் பீட்டர் டட்டன் குற்றஞ்சாட்டினார்.
இஸ்ரேல்மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலைக் கண்டித்தும், பணயக் கைதிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தியும், தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அனுதாபம் தெரிவித்துமே பிரதமரால் மேற்படி பிரேரணை முன்வைக்கப்பட்டது.
அத்துடன்,போர் நிறுத்தத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பிரேரணையில் சில மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு எதிர்க்கட்சி தலைவர் முற்பட்டாலும் அது வெற்றியளிக்கவில்லை.
இதனால் ஆதரவு வழங்க பிரதான எதிர்க்கட்சி மறுத்துவிட்டது. கிறீன்ஸ் கட்சியினர் வாக்கெடுப்பில் இருந்து விலகி இருந்தனர். சுயாதீன எம்.பிக்கள் ஆதரவளித்தனர்.
இதன்அடிப்படையில் பிரதிநிதிகள் சபையில் மேற்படி பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.