ஆஸ்திரேலியா ஆலிஸ் ஸ்பிரிங்ஸ் பகுதியில் காணாமல் போன ஐந்து வயது பூர்வக்குடி சிறுமி கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமி கடந்த சனிக்கிழமை கடத்தப்பட்டிருந்த நிலையில் அவரை தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இன்று 5 ஆவது நாளாக தேடுதல் தொடர்ந்த நிலையிலேயே அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிறுமியை கடத்திச்சென்ற 47 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த சிறுமிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அவரது ஊர் மக்கள் மற்றும் உறவினர்கள் மலர்கள் மற்றும் மெழுகுவர்த்திகளுடன் ஒன்று கூடித் தங்கள் ஆழ்ந்த துக்கத்தைப் பகிர்ந்து கொள்கின்றனர்.