ஆஸ்திரேலியாவின் மத்திய வங்கி, வட்டி விகிதத்தை 4.35 சதவீதமாக அதிகரித்துள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு , அதன் விளைவாக பணவீக்கம் கட்டுக்கடங்காமல் உயர்வதைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி மந்தமடைந்து பணவீக்கம் அதிகரிக்கும் 'ஸ்டாக் பிளேஷன்' (Stagflation) அபாயத்தைத் தவிர்க்க இந்த உயர்வு அவசியம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
வணிகம் மற்றும் நுகர்வோர் நம்பிக்கை குறைந்து வரும் நிலையில், விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த வங்கி கொண்டுள்ள உறுதியை இது காட்டுகிறது.
கடந்த ஆண்டு வழங்கப்பட்ட வட்டிச் சலுகைகள் இதன் மூலம் முழுமையாகத் திரும்பப் பெறப்பட்டுள்ளன. வரும் மாதங்களில் பொருளாதார மாற்றங்களைக் கவனித்த பிறகே அடுத்தகட்ட முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.