சிரியாவிலிருந்து ஆஸ்திரேலியாவிற்குத் திரும்பிய ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய மூன்று பெண்கள் தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.
இவர்களில் சிட்னி விமான நிலையத்தில் கைதான பெண் ஒருவருக்கு பிணை மறுக்கப்பட்டுள்ள நிலையில், மெல்போர்னில் பிடிபட்ட இருவர் மீது அடிமைத்தனக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த பெண்கள் அனைவரும் பல ஆண்டுகளாக சிரியாவில் உள்ள அகதிகள் முகாம்களில் தங்கியிருந்த பிறகு தற்போது தாயகம் திரும்பியுள்ளனர்.
இவர்களது வருகையைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் தீவிர விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நீண்ட காலத்திற்குப் பிறகு நாடு திரும்பிய இவர்களது செயல்கள் சமூகப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்குமா என்பதை அதிகாரிகள் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.
இந்த விவகாரம் ஆஸ்திரேலியாவில் பெரும் அரசியல் மற்றும் சட்ட விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.