ஆஸ்திரேலியாவில் இயங்கும் நியோ-நாசிசம் (Neo-Nazi) அமைப்பை அந்த நாட்டு அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக ஒரு வெறுக்கத்தக்க குழுவாக அறிவித்துள்ளது.
இந்தத் தடையின் மூலம் அந்த அமைப்பிற்கு நிதி வழங்குவது, உறுப்பினர்களைச் சேர்ப்பது அல்லது பயிற்சியளிப்பது போன்ற செயல்கள் இனி கடுமையான குற்றங்களாகக் கருதப்படும்.
வெள்ளையின மேலாதிக்கக் கொள்கையைப் பரப்பும் இக்குழுவினர் வெவ்வேறு பெயர்களில் இயங்கினாலும், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார்.
வன்முறையைத் தூண்டும் இத்தகைய குழுக்களின் செயல்பாடுகளை முடக்கி, சமூக அமைதியைப் பேணுவதே இந்த அதிரடி சட்ட மாற்றத்தின் முக்கிய நோக்கமாகும்.
இக்குழுவுடன் தொடர்புடைய எவரும் இனி 15 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.