இஸ்ரேலால் காவலில் வைக்கப்பட்டிருந்த Global Sumud Flotilla குழுவைச் சேர்ந்த 11 ஆஸ்திரேலிய ஆர்வலர்கள் தற்போது துருக்கியை சென்றடைந்துள்ளனர்.
தனது படைகளால் பிடித்து வைக்கப்பட்டிருந்த 422 வெளிநாட்டு ஆர்வலர்களையும் நாடு கடத்திவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இவர்களில் முதல் குழுவினர் துருக்கியை வந்தடைந்துள்ளனர். இதில் 11 ஆஸ்திரேலியர்கள் உள்ளடங்கியுள்ளனர்.
தடுத்து வைக்கப்பட்டிருந்த காலத்தில் தங்களை இஸ்ரேலியப் படைகள் மிகவும் மோசமாக நடத்தியதாகவும், தாக்கியதாகவும் விடுவிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இஸ்ரேலிய அமைச்சரின் முறையற்ற நடத்தையை அந்நாட்டுப் பிரதமரே கண்டித்துள்ள நிலையில், ஆஸ்திரேலிய அதிகாரிகள் தங்கள் நாட்டு மக்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்கி வருகின்றனர்.
போராட்டக்காரர்கள் விடுவிக்கப்பட்டாலும், பாலஸ்தீனத்தின் மீதான கடல்வழித் தடையை தொடர்ந்து அமல்படுத்துவதில் இஸ்ரேல் உறுதியாக உள்ளது.
இந்த ஆர்வலர்கள் அனைவரும் விரைவில் தங்கள் தாய்நாட்டிற்குத் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.