சனிக்கிழமையன்று கலிபோர்னியாவில் டொனால்ட் ட்ரம்ப் கலந்து கொண்ட கோச்செல்லா பேரணிக்கு அருகில் துப்பாக்கிகள் மற்றும் போலி நுழைவுச் சீட்டுகளுடன் ஆயுதம் ஏந்திய 49 வயதான வெம் மில்லர் என்று அடையாளம் காணப்பட்ட ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்,
ஆயுதம் ஏந்திய நபரை காவல்துறை கைது செய்ததால் மூன்றாவது டிரம்ப் மீதான படுகொலை முயற்சி காவல்துறையினரால் முறியடிக்கப்பட்டதாக Riverside County Sheriff சாட் பியான்கோ கூறினார்.
முன்னாள் ஜனாதிபதியின் பேரணியில் இருந்து ஒரு மைல் (1.6 கிமீ) தொலைவில் உள்ள சோதனைச் சாவடியில் அவர் ஒரு கருப்பு எஸ்யூவியில் நிறுத்தப்பட்டதாகவும்
லாஸ் வேகாஸில் வசிக்கும் அவரிடம் சட்டவிரோதமான அதிக திறன் கொண்ட துப்பாக்கி ரவைகள் நிரம்பிய துப்பாக்கி போலி ஊடக நுழைவுச் சீட்டு மற்றும் விஐபி நுழைவு அனுமதிச் சீட்டுகள் ஆகியவற்றை வைத்திருந்ததாக காவல்துறை தெரிவித்தனர்.
ஷெரிப் பியான்கோவின் கூற்றுப்படி, திரு மில்லர் ஒரு வலதுசாரி அரசாங்க எதிர்ப்பு அமைப்பின் உறுப்பினராக இருப்பதாக நம்பப்படுகிறது, மேலும் அவர் திரு டிரம்பைக் கொல்லவே வந்திருக்கலாம் என்று காவல்துறை சந்தேகம் தெரிவித்தனர். University of California, Los Angeles இல் முதுகலைப் பட்டம் பெற்றுள்ள அவர் 2022 இல் நெவாடா மாநில சட்டசபைக்கு போட்டியிட்டார் என்று ஒரு செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பைக் கொலை செய்ய முயற்சித்த சந்தேகத்தின் பேரில் காவல்துறை அவரைக் கைது செய்த போதிலும் US$5000 ($7500) ஜாமீன் வழங்கிய பின்னர் திரு மில்லர் விடுவிக்கப்பட்டார்.