நாடாளுமன்றத்தில் பூர்வக்குடி மக்களுக்கான குரல் கட்டமைப்பு காலத்தின் கட்டாயத் தேவையாகும் என்று பூர்வக்குடி மக்கள் தொடர்பான ஆதரவு பிரச்சாரகக்காரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பூர்வக்குடி மக்கள் தொடர்பான குரல் கட்டமைப்பை நிறுவுவதற்கு மக்களிடம் ஆணைகோரும் சர்வஜன வாக்கெடுப்பு 2023 நவம்பர் 14 ஆம் திகதி நடைபெற்றது.
இதன்போது 60 சதவீதத்துக்கு மேற்பட்ட வாக்காளர்கள், ‘நோ’ என வாக்களித்து மேற்படி முன்மொழிவை நிராகரித்துவிட்டனர்.
இவ்வாறு சர்வஜன வாக்கெடுப்பு தோல்வியடைந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்தாலும், பூர்வக்குடி மக்களுக்கான குரல் கட்டமைப்பு தொடர்பான அவசியத்துவம் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டுவருகின்றது.
“ சர்வஜன வாக்கெடுப்பின்போது பெரும்பாலானவர்கள் இல்லை என வாக்களித்தனர். ஆனால் அதனால் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. எனவே, குரல் கட்டமைப்பு அவசியம்.” என்று Uluru அறிக்கை தயாரிப்பாளர்களில் ஒருவரான பேராசிரியர் Megan Davis தெரிவித்தார்.
நீடித்த, நிலையான மாற்றத்துக்கு மேற்படி கட்டமைப்பு நிச்சயம் நிறுவப்பட வேண்டும் எனவும் பேராசிரியர் வலியுறுத்தினார்.
அதேவேளை, குரல் வாக்கெடுப்பு தோல்விமூலம் நல்லிணக்கம் மரணித்துவிட்டது, எனவே, அதற்கு புத்துயிர் கொடுப்பதற்கு குரல் கட்டமைப்பு அவசியம் எனவும் ஆம் பரப்புரையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதற்கிடையில் சமூகங்களை பிளவுப்படுத்தக்கூடிய இத்தகைய திட்டங்கள் அவசியம் இல்லை என குரல் கட்டமைப்புக்கு எதிரானவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.