அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையில் அதிகரித்து வரும் இராணுவ மோதல்கள் குறித்து ஆஸ்திரேலியப் பிரதமர் Anthony Albanese தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
ஈரான் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ள நிலையில், இந்த போர்ச் சூழல் உலகளாவிய பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று Anthony Albanese
எச்சரித்துள்ளார்.
டொனால்ட் ட்ரம்ப் அறிவிக்கும் அமைதி ஒப்பந்தங்கள் ஒருவித நிச்சயமற்ற தன்மையை உருவாக்குவதாகவும், இதனால் எரிபொருள் விலை உயர்வு போன்ற பாதிப்புகள் ஏற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஆஸ்திரேலிய அரசாங்கம் இப்பிரச்சினையில் ஒரு நிரந்தர போர்நிறுத்தத்தை விரும்புவதோடு, உள்நாட்டுப் பொருளாதாரத்தைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை ஆலோசித்து வருகிறது.