தடுப்பிலுள்ள ஈழ அகதியொருவரை நாடு கடத்துவதற்கு ஆஸ்திரேலியா அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி எதிர்வரும் 23 ஆம் திகதி குறித்த புகலிடக்கோரிக்கையாளர், ஆஸியிலிருந்து கொழும்புக்கு நாடுகடத்தப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்குரிய ஏற்பாடுகளை ஆஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு படை கண்காணித்துவருகின்றது. 1958 குடிவரவு சட்ட ஏற்பாடுகளுக்கமையவே இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
இலங்கையில் வவுனியா மாவட்டத்தில் இருந்து இவர் 2012 ஆம் ஆண்டு படகுமூலம் ஆஸ்திரேலியா வந்துள்ளார். ‘பாஸ்;ட் ட்ரெக்’ செயன்முறையின்கீழ் பாதிக்கப்பட்ட அகதியாவார்.
அநீதிக்கு எதிராக இலங்கையில் நடைபெற்ற பல ஜனநாயக போராட்டங்களில் இவர் பங்கேற்றுள்ளார் என தெரியவருகின்றது.
லேபர் ஆட்சியில் அகதிகள் நாடுகடத்தப்படமாட்டார்கள் என அறிவிப்பு விடுத்த லேபர் கட்சி சார்பு தமிழ் செயற்பாட்டாளர்கள், இது விடயம் தொடர்பில் மௌனம் காப்பது சம்பந்தமாக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.