லெபனானில் இருந்து வெளியேறிய மேலும் 200 ஆஸ்திரேலியர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
அவர்கள் பயணித்த விமானம் நேற்றிரவு சிட்னி விமான நிலையத்தில் தரையிறங்கியது.
லெபனான்மீது இஸ்ரேல் போர் தொடுத்ததில் இருந்து இதுவரை ஆயிரத்து 121 ஆஸ்திரேலியர்கள் அங்கிருந்து நாடு திரும்பியுள்ளனர் என்று வெளிவிவகார அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.
லெபனானில் 15 ஆயிரம் வரையான ஆஸ்திரேலியர்கள் வாழ்கின்றனர் என அரச தகவல்கள் தெரிவித்தாலும், அந்த எண்ணிக்கை 30 ஆயிரமாக இருக்கக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.