சிட்னி துறைமுக பாலப்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர்.. மேலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
பஸ்ஸொன்றும், மூன்றுக்கு மேற்பட்ட கார்களும் மோதுண்டே இன்று மதியம் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.பஸ் சாரதிக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.
இவ்விபத்தையடுத்து சிட்னி துறைமுக பால பாதை தற்காலிகமாக மூடப்பட்டது.
விபத்து தொடர்பான விசாரணைகளை நியூ சவூத் வேல்ஸ் பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.