ரஷ்யாவை எதிர்த்து போரிட்டுவரும் உக்ரைனுக்கு முக்கிய இராணுவ போர் டாங்கிகளை நன்கொடையாக ஆஸ்திரேலியா வழங்கவுள்ளது.
சுமார் 245 மில்லியன் டொலர்கள் மதிப்பிலான இராணுவ உதவித் திட்டத்தின் ஓர் அங்கமாகவே இவ்வாறு போர் டாங்கிகள் வழங்கப்படுகின்றன.
உக்ரைனின் கவசப் படைகளுக்கு இந்த உதவி பெரும் பங்களிப்பாக அமையும் என பாதுகாப்புதுறை சார் நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
உக்ரைன்மீது ரஷ்யா போர் தொடுத்ததில் இருந்து இற்றைவரை உக்ரைனுக்காக 1.5 பில்லியன் டொலர்களுக்கு அதிகமான இராணுவ ஒத்துழைப்புகளை ஆஸ்திரேலியா வழங்கியுள்ளது.
நேட்டோ பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ள ஆஸ்திரேலிய பாதுகாப்பு தொழில்துறை அமைச்சர், மேற்படி இராணுவ உதவித் திட்டத்துக்கான உறுதிமொழியை உக்ரைன் அதிகாரிகளிடம் வழங்கியுள்ளார்.
ரஷ்யாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடும் உக்ரைனுக்கு ஆஸ்திரேலியாவின் உதவி தொடரும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
அதேவேளை ரஷ்யாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா தடைகளை விதித்துள்ள நிலையில், உக்ரைனுக்கான தொடர் உதவிகளானவை அந்நாட்டை கொதிப்படையச் செய்துள்ளது என இராஜதந்திர வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.