லண்டன், லெய்செஸ்டர் சதுக்கத்தில் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்கான சிறுமி ஆஸ்திரேலிய பிரஜை என்பதை வெளிவிவகார அமைச்சர் இன்று உறுதிப்படுத்தியுள்ளார்.
மத்திய லண்டனில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் 11 வயது சிறுமி படுகாயம் அடைந்தார். அவர் தற்போது லண்டன் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றார். அவருக்கு அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த சிறுமி தனது தாயுடன் லண்டனுக்கு சுற்றுலா சென்றிருந்தவேளையிலேயே இக்கொடூர சம்பவத்தை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது. அவர்மீது எட்டு முறை கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இவர்களுக்கு தேவையான உதவிகளை பிரிட்டனில் உள்ள ஆஸ்திரேலிய தூதரகம் ஊடாக வழங்கப்பட்டுவருகின்றது.
தாக்குதல் நடத்திய 32 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.