பேர்த்தில் இடம்பெற்ற கார் விபத்தில் மூவர் பலியாகியுள்ளனர். மேலும் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இன்று அதிகாலை 5.10 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
குறித்த காரில் பயணித்த மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தனர்.
வேகப்பட்டுப்பாட்டை இழந்து கார் மரத்தில் மோதி பின்னர் வீடொன்றில் மதில்மீதும் மோதியுள்ளது.
வீட்டில் இருந்த எவருக்கும் காயம் எவுதும் ஏற்படவில்லை. 22 மற்றும் 34 வயதுகளுடைய மூவரே உயிரிழந்துள்ளனர்.