பொலிஸாரின் நடத்தை, பூர்வக்குடி பெண்கள் மற்றும் சிறார்கள் கொலை செய்யப்பட்டமை மற்றும் காணாமல்ஆக்கப்பட்டமை போன்ற சம்பவங்கள் தொடர்பில் பூர்வக்குடி மக்களால் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு சுயாதீன பொறிமுறை அவசியமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
பூர்வக்குடி பெண்கள் மற்றும் சிறார்கள் கொலை செய்யப்பட்டமை, காணாமல்ஆக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு செனட் குழுவொன்று அமைக்கப்பட்டது.
ஈராண்டு பொது விசாரணைகளின் பின்னர், அக்குழு தனது விசாரணை அறிக்கையை முன்வைத்துள்ளது. அதில் 10 பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்றே சுயாதீன விசாரணைப் பொறிமுறை பரிந்துரையாகும்.
அத்துடன், பூர்வக்குடி மக்களுடனான தொடர்புகளை உறுதிப்படுத்த, ஆஸ்திரேலியா முழுவதும் உள்ள காவல் நடைமுறைகளை மறுபரிசீலனை செய்வதற்குரிய பரிந்துரையும் முன்வைக்கப்பட்டுள்ளது.