சிட்னியில் நடைபெற்ற பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தின்போது ஹிஸ்புல்லா அமைப்பின் கொடியை காட்சிப்படுத்திய 19 வயது யுவதி நீதிமன்றத்தில் இன்று முற்படுத்தப்பட்டார்.
ஆஸ்திரேலியாவில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பின் கொடியை காட்சிப்படுத்தினார் என இவர்மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
சிட்னி நகர மைய பகுதியில் செப்டம்பர் 29 ஆம் திகதி நடைபெற்ற போராட்டத்தின்போதே 19 வயதான Sarah Mouhanna, என்ற யுவதி ஹிஸ்புல்லா அமைப்பின் கொடியை ஏந்தி இருந்தார்.
விசாரணைகளின் பின்னர் அவர் கைது செய்யப்பட்டிருந்தாலும், பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையிலேயே இன்று சிட்னி நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.
அடுத்தக்கட்ட வழக்கு விசாரணை டிசம்பர் 11 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதன்போது நீதிமன்றத்தில் முன்னிலை ஆகுவதில் இருந்து அவருக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது.