மெல்பேர்ணில் நேற்று நடைபெற்ற புகலிடக்கோரிக்கையாளர்களின் போராட்டத்துக்கு இடையூறு விளைவித்த கறுப்பு ஆணை அணிந்த நவ நாஜிகள் தொடர்பில் விசாரணை ஆரம்பமாகியுள்ளது.
தமக்கு நிரந்த விசா வழங்குமாறுகோரி புகலிடக்கோரிக்கையாளர்களால் முன்னெடுக்கப்பட்ட தொடர் போராட்டம் நேற்று 100 ஆவது நாளை எட்டியது.
இதனையொட்டி மெல்பேர்ணில் மாபெரும் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பேரணி செல்லும்போது கறுப்பு ஆடை அணிந்து ,சுமார் 20 நவ நாஜிகள் குழு அங்கு வந்து, குழப்பம் விளைவிக்க முற்பட்டுள்ளது. இதனையடுத்து நவ நாஜிகளை கலைப்பதற்காக பொலிஸார் மிளகாய் ஸ்பிரேயை பயன்படுத்தினர்.
நவநாஜிகளின் இந்த செயலை மாநில பிரீமியர் வன்மையாகக் கண்டித்துள்ளார். அவர்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் பொலிஸாருக்கு உள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர்கள் கோழையென்பதாலேயே முகங்களை மூடிக்கொண்டு வந்துள்ளனர் எனவும் விளாசித்தள்ளியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை. எவருக்கும் உடல் ரீதியாகவும் காயம் ஏற்படவில்லை. எனினும், இச்சம்பவம் கவலையளிக்கின்றது என்று புகலிடக் கோரிக்கை பேரணியின் ஏற்பாட்டாளர் அரண் மயில்வாகனம் தெரிவித்தார்.