நியூ சவூத் வேல்ஸ் மாநிலத்தில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் குற்றச்செயல் கடந்த பத்தாண்டுகளில் 8 மடங்கால் அதிகரித்துள்ளது.
மது அருந்திவிட்டு வாகனம் செலுத்தியமை தொடர்பில் 2014 ஆம் ஆண்டு 1,409 பேருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
எனினும், கடந்த வருடம் இந்த எண்ணிக்கை 13,815 ஆக அதிகரித்துள்ளது என்று புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
இதனால் சாலையோர சோதனை நடவடிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, நியூ சவூத் வேல்ஸ் மாநிலத்தில் வீதி விபத்துகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. எனவே, மது அருந்திவிட்டு வாகனம் செலுத்துபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்ட திருத்தம் பற்றியும் தற்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.