தீபெத் மற்றும் சின்ஜியாங் பகுதிகளில் மனித உரிமை மீறல்களுக்கு சீனா முடிவு கட்ட வேண்டும் என்று ஆஸ்திரேலியா விடுத்துள்ள அழைப்பு தொடர்பில் பீஜிங் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
அத்துடன், இனவெறி மற்றும் வெறுப்புக்கொள்கை ஆஸ்திரேலியாவிலேயே பின்பற்றப்படுகின்றது எனவும் சீனா பதிலடி கொடுத்துள்ளது.
சீனாவின் சின்சியாங் மாகாணம் மற்றும் தீபெத்தில் சிறுபான்மையினத்தவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் பாரிய மனித உரிமை மீறல் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஆஸ்திரேலியா, அமெரிக்கா உட்பட 15 நாடுகள் இந்த அறிக்கையை வரவேற்றுள்ளன. இந்நிலையிலேயே சீன தரப்பில் இருந்து இதற்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன், அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் உரிமைகளையும் ஆஸ்திரேலியா கடுமையாக மீறிவருகின்றது என சீனா சுட்டிக்காட்டியுள்ளது. எனினும், சீனாவின் இந்த குற்றச்சாட்டுகளை பிரதமர் அந்தோனி அல்பானீஸி நிராகரித்துள்ளார்.