சிட்னியில் எதிர்வரும் 31 ஆம் திகதி நடைபெறவிருந்த நியூ சவூத் வேல்ஸ் பாதுகாப்பு உச்சி மாநாடு இரத்து செய்யப்பட்டுள்ளது. திட்டமிடப்பட்ட தொடர் எதிர்ப்பு போராட்டங்கள் காரணமாகவே மாநாடு இரத்தாகியுள்ளது.
மத்திய கிழக்கில் போர் ஏற்பட்ட காலம் முதல் அதன் தாக்கம் ஆஸ்திரேலியாவிலும் எதிரொலித்துவருகின்றது. அண்மைக்காலமாக பல போராட்டங்கள் இடம்பெற்றுவருகின்றன.
குறிப்பாக பாதுகாப்பு மாநாட்டுக்கு எதிராக மெல்பேர்ணில் கடந்த மாதம் நடைபெற்ற போராட்டம், வன்முறையாக மாறியது. 1,500 இற்கு மேற்பட்ட போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது 27 பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்தனர். இது தொடர்பில் 42 இற்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே நியூ சவூத் வேல்ஸ் பாதுகாப்பு மாநாடும் இரத்து செய்யப்பட்டுள்ளது.
சபா.தயாபரன்