பல்லாயிரக்கணக்கான டொலர்கள் மதிப்புள்ள சிறப்பு வெளியீடான நாணங்களை திருடினார் எனக் கூறப்படும் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிட்னி தென்மேற்கு பகுதியில் வைத்தே 27 வயதான குறித்த பெண் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர்மீது மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. பொலிஸ் பிணை மறுக்கப்பட்ட நிலையில், அவரை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பில் ஏற்கனவே இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று கைது செய்யப்பட்டவர் மூன்றாவது நபராவார்.