மெல்பேர்ணில் ஆயுதக் கண்காட்சிக்கு வெளியே நடந்த போராட்டத்தின்போது நாஜி வணக்கம் செலுத்தினார் எனக் கூறப்படும் 63 வயது நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் நடந்த ஆயுதக் கண்காட்சிக்கு எதிராக நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது. பொலிஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் மோதல் வெடித்தது.
இதனால் பொலிஸ் அதிகாரிகள் உட்பட பலர் காயம் அடைந்தனர். பல போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.
வன்முறையை தூண்டும் வகையில் செயற்பட்டவர்களின் புகைப்படங்களை பொலிஸார் வெளியிட்டிருந்தனர். அது தொடர்பான தேடுதல் வேட்டையும் இடம்பெற்றுவந்தது.
இவர்களில் 12 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் இன்று தெரிவித்தனர். மேலும் 89 பேர் தேடுதல் பட்டியலில் உள்ளனர்.