மெல்பேர்ண் உயர்நிலை பாடசாலையில் கல்வி பயிலும் யூத மாணவர்களுக்கு எதிராக நாஜி எதிர்ப்பு கோஷம் எழுப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் விக்டோரியா பொலிஸார் விசாரணை வேட்டையை ஆரம்பித்துள்ளனர்.
இன்று திங்கள்கிழமை காலைவேளையிலேயே யூத மாணவர்களை இலக்கு வைத்து பஸ்சுக்குள் இவ்வாறு நாஜி எதிர்ப்பு கோஷம் எழுப்பட்டுள்ளது எனக் கூறப்படுகின்றது.
இரு ஆண்களே இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர் எனவும், யூத மாணவர்களை உளரீதியில் தாக்கும் நோக்கில் கடுமையான யூத எதிர்ப்பு கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன என்று பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
" இன ரீதியாக தூண்டப்பட்ட இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரித்து வருகின்றனர்" என்று பொலிஸ் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
2024 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் மெல்போர்னில் பரவலாக கிளம்பியிருக்கும் யூத-எதிர்ப்பு வெறுக்கத்தக்கது எனவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சபா.தயாபரன்