மெல்பேர்ணில் நபரொருவரின் முகத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று பெண்கள் உட்பட ஆறுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த திங்கட்கிழமையே குழுவொன்று வீடு புகுந்து, 36 வயது நபர்மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது.
இதனால் படுகாயமடைந்த அவர் வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவருகின்றார்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவந்த நிலையில், வீடொன்றில் பதுங்கி இருந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை இன்று நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அறுவர்மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.