சிட்னி தென்மேற்கு bushland பகுதியில் 15 வயது சிறுவனொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், இதனை சந்தேகத்துக்கிடமான மரணமாக பொலிஸார் கருதி, விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
தனது நண்பர்கள் சகிதம் முகாமிட்டிருந்த சிறுவன் ஒருவரே இன்று காலை இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
என்ன நடந்துள்ளது என்பது தெரியவில்லை, எனினும், விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுவனின் மரணம் தொடர்பில் அவரது குடும்பத்தாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.