ஜி -20 மாநாடு மற்றும் ஆசிய, பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் அந்தோனி அல்பானீஸி, வார இறுதியில் தென் அமெரிக்க நாடான பிரேசிலுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
ஜி - 20 அரச தலைவர்கள் மாநாடு நவம்பர் 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் பிரேசிலில் நடைபெறுகின்றது. இதற்கு இணையாக பொருளாதார ஒத்துழைப்பு மாநாடும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இம்மாநாட்டில் பற்கேற்கும் பிரதமர் அந்தோனி அல்பானீஸி, அங்கத்துவ நாடுகளின் தலைவர்களுடன் இரு தரப்பு பேச்சுகளில் ஈடுபடவுள்ளார்.
குறிப்பாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடனும் விசேட கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார். அமெரிக்க ஜனாதிபதியாக பைடனுடன் நடத்தப்படும் கடைசி சந்திப்பாக இது அமையவுள்ளது.
பைடன் ஆட்சியின்கீழ் ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையில் இருந்த நட்புறவை, ட்ரம்ப் ஆட்சியிலும் தொடர்வதற்கு லேபர் அரசு, தமது அர்ப்பணிப்புகளை வெளிப்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.