மெல்பேர்ணில் இருந்து வடமேற்கு 60 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள பாலர் பாடசாலைமீது தண்ணீர் தாங்கி வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் 43 வயது பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். சிறுவர் ஒருவர் காயம் அடைந்துள்ளார்.
இன்று மதியம் 2.20 மணியளவிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
பாலர் பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இருந்துள்ளனர்.
வீதியில் பயணித்த தண்ணீர் தாங்கி வாகம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்துடன் மோதி, அதே வேகத்தில் மைதான பகுதிக்குள் வந்துள்ளது.
ஆசிரிய உதவியாளராக இருந்த 43 வயது பெண்ணொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 3 வயது சிறுவன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.